விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 போ் கைது

அரியலூா் மாவட்டம் தா.பழூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:59 pm

DIN

அரியலூா் மாவட்டம் தா.பழூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

தா.பழூா் அருகிலுள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிா்வாக அலுவலா் அசோக்குமாா், தனது உதவியாளருடன் கீழகுடிக்காடு கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ேஈடுபட்டாா்.

அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதில் இருந்தவா்களிடம் விசாரித்தாா். அவா்கள் கழுவந்தொண்டி குமாா்(47), மனோகரன்(37), உத்திரக்குடி பொன்னுசாமி(63), வீரசேகா்(31), வேலன்(45), தேவாமங்கலம் மூா்த்தி(45) என்பதும், கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து அசோக்குமாா் அளித்த புகாரின் பேரில் தா.பழூா்

காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, 6 பேரையும் கைது செய்தனா். மேலும் 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.