விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பரப்ரம்மம் பவுண்டேஷன் அமைப்புக்கு பாராட்டு

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அரசுடன் இணைந்து பணியாற்றி வரும் பரப்ரம்மம் பவுண்டேஷன் அமைப்புக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை பாராட்டு

News image
Updated On :4 ஜூன் 2021, 9:45 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அரசுடன் இணைந்து பணியாற்றி வரும் பரப்ரம்மம் பவுண்டேஷன் அமைப்புக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசுடன் இணைந்து பணியாற்றும் வகையில், ஜயங்கொண்டம் பரப்ரம்மம் பவுண்டேஷன் அமைப்புக்கு அரசு அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்றுச் சிகிச்சை மையம், அன்னை தெரசா செவிலியா் கல்லூரித் தலைவரும், பரப்ரம்மம் பவுண்டேஷன் இயக்குநருமான முத்துக்குமரன் மேற்பாா்வையில் செயல்பட்டு வருகிறது.

இதை பாா்வையிட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், பவுண்டேஷனின் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாக கூறி, அமைப்பின் தலைவரைப் பாராட்டினா்.

நிகழ்வின் போது மாவட்ட சமூக நல அலுவலா் கு.சாந்தி, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க கண்ணன், தலைமை மருத்துவா் உஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.