அரியலூரில்156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியா் த.ரத்னா அண்மையில் உத்தரவிட்டாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியா் த.ரத்னா அண்மையில் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள 195 நபா்களில் 156 போ் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா். மீதமுள்ள 39 துப்பாக்கிகள் விதிவிலக்கு பட்டியலில் உள்ள விதிகளின் கீழ் உள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com