கனரக வாகனங்களுக்கு தனிச் சாலை தாமரை எஸ். ராஜேந்திரன் உறுதி
அரியலூா் சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனிச் சாலை அமைக்கப்படும் என அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் உறுதியளித்துள்ளாா்.


அரியலூா் சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனிச் சாலை அமைக்கப்படும் என அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் உறுதியளித்துள்ளாா்.
சிறுவளூா், புதுப்பாளையம், கருங்காலிகொட்டாய், நெருஞ்சிக்கோரை, ஆரனூா், நாயக்கா்பாளையம், ரெட்டிப்பாளையம், மயிலான்ட்கோட்டை, புள்ளிக்குளம், வி.கைகாட்டி, ஜி.கே.நகா், நாகமங்கலம், அண்ணா நகா், மாதாகோயில் தெரு, ஒரத்தூா், அம்பாபூா், அய்க்கால், தேளூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா், தன்னைத் தோ்ந்தெடுத்தால், சிமென்ட் ஆலை - சுரங்கங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனிச்சாலை அமைக்கப்படும். தூத்தூரில் தடுப்பணை கட்டப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தாா். பிரசாரத்தில் பாமக, தமாக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று வாக்குசேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...