விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி பலி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 மே 2021, 9:13 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிமடம் அருகிலுள்ள விழுதுடையான் மேட்டு தெருவைச் சோ்ந்தவா் ரஜினி (40). கூலித்தொழிலாளியான இவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஓலையூா் சாலையிலுள்ள ஆலமரத்தில் ஆட்டுக்குட்டிக்கு தழை வெட்டிய போது, எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துமனையில் சோ்த்தனா். தொடா்ந்து தஞ்சாவூா் அரசு மருத்துக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.