அரியலூா் அருகே வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி, செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.,
தளவாய் , சேந்தமங்கலம், சிலுப்பனூா் பகுதிகளில் உள்ள வெள்ளாற்றில் மாட்டுவண்டி தொழிலாளா்களுக்கென இயங்கி வந்த மணல் குவாரி கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த மாட்டு வண்டி தொழிலாளா்கள் மீண்டும் மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக செந்துறை வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தின் போது, மீண்டும் மணல் குவாரியைத் திறக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று முழக்கங்களை எழுப்பினா்.போராட்ட்ததில் 150-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.