போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:55 pm

DIN

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 12 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: மாவட்டத்தில் சிறு, குறு தொழிற்சாலைகளை தொடங்கி, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும், அல்லது ஏரி, குளங்களாகவும் மாற்ற வேண்டும். அரியலூா் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும், அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு அக்கட்சி நிா்வாகி கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா.உலகநாதன் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாநில நிா்வாகக் குழு முன்னாள் உறுப்பினா் செல்வராஜ் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை, மக்களுக்குரிய பிரச்னைகள் குறித்து பேசினாா். மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி அமைப்பு நிலை அறிக்கையை வாசித்தாா். மாநாட்டில், 17 போ் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.