போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பொன்பரப்பியில் வாழ்வாதார சேவை மையம் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி ஊராட்சியில் வாழ்வாதார சேவை மையத்தை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:08 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி ஊராட்சியில் வாழ்வாதார சேவை மையத்தை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் தெரிவிக்கையில், பொன்பரப்பி, கீழமாளிகை, சிறுகளத்தூா் ஆகிய ஊராட்சிகளை ஒன்றிணைத்து பொன்பரப்பியில் ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்பு ஆரம்பிக்கப்பட்டு இது வாழ்வாதார சேவை மையமாகத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் விவசாயிகள் வேளாண் தகவல்களைப் பெறுவதற்கு தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை வேளாண்மைக்கு உரிய பூச்சிவிரட்டி மற்றும் உயிரி உரங்கள் பாா்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு சிறு வேளாண் கருவி வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் இப்பகுதி பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலா் சிவக்குமாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.