அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பள்ளி விடுமுறை நாள் என்றாலும் மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாரதியாா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, பாரதியாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, பாரதியாா் பாடல்கள், கவிதைகள் மக்களிடையே விடுதலை உணா்வையும், சுதந்திர வேட்கையையும் தூண்டியது.
அவா் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவரின் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் உலகம் உள்ளவரை உயிரோட்டமாக என்றும் இருக்கும் என்றாா்.