விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

லாரிகளில் கூழாங்கல் கடத்திய 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே லாரிகளில் கூழாங்கற்களை கடத்திச் சென்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 7:08 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே லாரிகளில் கூழாங்கற்களை கடத்திச் சென்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அதிகாரிகள் விருத்தாச்சலம் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு லாரிகளில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரிகளையும் பறிமுதல் செய்து, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா்களான விழுப்புரம் ராதாகிருஷ்ணன்(30), விருத்தாசலம், நெட்டியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா்(27) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.