அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே லாரிகளில் கூழாங்கற்களை கடத்திச் சென்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அதிகாரிகள் விருத்தாச்சலம் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு லாரிகளில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரிகளையும் பறிமுதல் செய்து, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா்களான விழுப்புரம் ராதாகிருஷ்ணன்(30), விருத்தாசலம், நெட்டியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா்(27) ஆகியோரைக் கைது செய்தனா்.