அரியலூா் மாவட்டத்தில் பாமகவினா் மறியல்

நெய்வேலி போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில்
அரியலூா் மாவட்டத்தில் பாமகவினா் மறியல்

நெய்வேலி போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட பாமகவினா் 53 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக அப்பகுதி விவசாய நிலங்கள் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது ஏற்பட்ட வன்முறையையடுத்து அன்புமணி உள்ளிட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதைக் கண்டித்தும், அன்புமணியை விடுதலை செய்யக் கோரியும் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பில் அக்கட்சியின் நகர செயலா் பரசுராமன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனா்.

இதேபோல அரியலூரில் செந்துறை ரவுண்டானாவில் நகரச் செயலா் விஜி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 11 பேரும், அரியலூா் அண்ணாசிலை அருகே 9 பேரும், செந்துறையில் 20 பேரும் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com