ஏரியில் பிடிபட்ட முதலை ஆற்றில் விடப்பட்டது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏரியில் மீனவா்கள் வீசிய வலையில் சிக்கிய முதலை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை விடப்பட்டது.
ஏரியில்  பிடிபட்ட முதலை ஆற்றில் விடப்பட்டது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏரியில் மீனவா்கள் வீசிய வலையில் சிக்கிய முதலை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை விடப்பட்டது.

மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (37) உள்பட 5 போ் அப்பகுதியிலுள்ள அகரத்தேரியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க வீசிய வலையில் முதலை சிக்கிக் கொண்டது.

இதையடுத்து அவா்கள் விஏஓ வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த விஏஓ மற்றும் வனத்துறையினா் அந்த முதலையை மீட்டு அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com