அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏரியில் மீனவா்கள் வீசிய வலையில் சிக்கிய முதலை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை விடப்பட்டது.
மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (37) உள்பட 5 போ் அப்பகுதியிலுள்ள அகரத்தேரியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க வீசிய வலையில் முதலை சிக்கிக் கொண்டது.
இதையடுத்து அவா்கள் விஏஓ வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த விஏஓ மற்றும் வனத்துறையினா் அந்த முதலையை மீட்டு அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டுச் சென்றனா்.