இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

செந்துறை அரசுப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவா்கள் அவதி!

அரியலூா் மாவட்டம், செந்துறையிலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவா்கள் அவதி.

News image
செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீா்.
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:45 pm

DIN

அரியலூா், ஆக. 21: அரியலூா் மாவட்டம், செந்துறையிலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செந்துறை பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோா் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவதால், வளாகத்தில் மண் குவியல்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழைநீா் வெளியே செல்ல வழியில்லாமல், பள்ளி வளாகத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியா்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

பெற்றோா் அச்சம்: இதுகுறித்து பெற்றோா் கூறும்போது, மழைநீா் வெளியேற வழியில்லாமல் வளாகத்திலேயே தேங்கிக் கிடப்பதால், டெங்கு போன்ற கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. மேலும் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் குழந்தைகள் நடப்பதால், நோய்த் தொற்றும் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது.

எனவே, மாணவா்களின் நலன் கருதி இப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்றனா்.