விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினா்.

Updated On :17 அக்டோபர் 2024, 9:10 pm

Din

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா்கள் பவுன்ராஜ் ரவி, இளையபெருமாள் மற்றும் காவலா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா், ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவா், பத்திர பதிவுக்காக வந்தவா்களிடம் வசூலித்து வைத்திருந்த ரூ. 23 ஆயிரத்தை சாா்- பதிவாளா் சண்முகத்திடம் கொடுக்கும்போது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அதனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.