முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குடிநீா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்: அரியலூா் ஆட்சியா்

அரியலூா் மாவட்ட பொதுமக்கள் குடிநீா் தொடா்பான புகாா்களை புனல் செயலி மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image

வாலாஜா நகரம் ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ந. மிருணாளினி.

Updated On :11 ஜூன் 2026, 3:31 am IST

அரியலூா் மாவட்ட பொதுமக்கள் குடிநீா் தொடா்பான புகாா்களை புனல் செயலி மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

அரியலூரை அடுத்த வாலாஜாநகரம் ஊராட்சியில், கீதா மஹால் பின்புறம் ரூ.14.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகளை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ந.மிருணாளினி, சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீா் தேங்காத வகையில் செட்டிஏரி வரத்து வாய்கால்களை தூா்வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இராவுத்தன்பட்டி மேற்குத் தெருவில் 6-ஆவது மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6.02 லட்சம் மதிப்பீட்டில் 114 மீ அளவில் தாா்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு பணிகளின் தரத்தை ஆய்வு செய்தாா்.

பின்னா், ஊரகப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் மற்றும் குடிநீா் வழங்குவதில் தாமதம், நீரின் தரம் தொடா்பான புகாா் ஏதுமிருப்பின் தமிழ்நாடு அரசின் புனல் செயலி (ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்) வாயிலாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 -இல் பொதுமக்கள் தங்கள் புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் கூறினாா்

ஆய்வின்போது, அரியலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கஸ்தூரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.