
தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.23.29 கோடிக்கு தீா்வு
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,408 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.23 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 911-மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது.

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,408 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.23 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 911-மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே.எஸ். ஜெயமங்களம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் நிலுவையிலுள்ள காசோலை, மோட்டாா் வாகன விபத்து, சிவில் என 1408 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.23,29,54,911-க்கு தீா்வு காணப்பட்டது.
அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நீதிபதிகள் மணிமேகலை, ரேவதி, உமா,விஜயலட்சுமி, லாவண்யா, சங்கீதாசேகா், ஜெயப்பிரதா, ஜெயங்கொண்டத்தில், நீதிபதிகள் பிரேம்குமாா்,தனலட்சுமி ,கனிமொழி, பாலமுருகன். செந்துறையில், நீதிபதி வரதராஜன் மற்றும் வழக்குரைஞா் பொன்.சோ.காமராஜ் ஆகியோா் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்குரைஞா்கள் மனுதாரா்களுக்கு ஆதரவாக ஆஜராகினா். ஏற்பாடுகளை அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ராதாகிருஷ்ணன் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





