அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரேஷன் கடை பூட்டை உடைத்து  6 மூட்டை சர்க்கரை திருட்டு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து 6 சர்க்கரை மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:51 pm

DIN

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து 6 சர்க்கரை மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி அருகேயுள்ள தெத்துப்பட்டியில் உள்ள ரேஷன் கடையை கடந்த 3-ம் தேதி விற்பனையாளர் அன்புமணி (54)  பூட்டிச் சென்றார். பின்னர் கடந்த 7-ம் தேதி திறக்கச் சென்றபோது  பூட்டு உடைக்கப்பட்டு கடையினுள் இருந்த தலா 50 கிலோ எடைகொண்ட 6 சர்க்கரை மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதன் மதிப்பு ரூ.4,050 .  இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் விற்பனையாளர் அன்புமணி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.