நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

கரூர் முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமியின் சொத்துகள் முடக்கம்

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் கரூர் முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:41 am IST

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் கரூர் முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம், காவாளிபாளையத்தைச் சேர்ந்தவர் கே.சி. பழனிசாமி. திமுகவைச் சேர்ந்த இவர் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். 
இவர் 1990, 1997 ஆகிய இருமுறை பழனி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர் குழுத் தலைவராவும், 2004-ல் கரூர் எம்பியாகவும் இருந்தவர். 
2011-ல் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 
இவர் கரூர் மாவட்டம், மாயனூரில் பாலீத்தீன் சிமென்ட் பைகள் தயாரிக்கும் பேக்கேஜிங் நிறுவனம், புதுச்சேரி மாநிலம் திருவண்டார் கோயில் பகுதியில் காகித ஆலையை நடத்தி வருகிறார். 
இந்நிலையில் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தாததால்  இவரது சொத்துகளை பாரத ஸ்டேட் வங்கி கையகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. 
கேசி. பழனிசாமி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகளை அடமானம் வைத்து மாயனூர், புதுச்சேரி நிறுவனங்கள் பெயரில் ரூ. 173 கோடி கடனாகப் பெறப்பட்டுள்ளது. 
கடன்தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தாததால் கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஐடிபி வங்கிகள் உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடன்தாரர் அடமானம் வைத்து உத்தரவாதம் அளித்த சொத்துக்கள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.