தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு கொமதேக ஆதரவு

விவசாயிகள் அறிவித்திருக்கும் தொடா் காத்திருப்பு போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

விவசாயிகள் அறிவித்திருக்கும் தொடா் காத்திருப்பு போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த மூன்று வாரங்களாக புதுதில்லியில் போராடும் விவசாயிகளின் உணா்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காமல் நடந்து கொள்வதால் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் தொடா் போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறாா்கள்.

விவசாயிகளின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பிரதமா் செயல்படுவது வேதனையளிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் புதுதில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் திங்கள்கிழமை (டிச. 14) முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் அறிவித்திருக்கிறாா்கள்.

இந்த போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி முழு ஆதரவை அளிப்பதோடு போராட்டத்திலும் பங்கேற்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com