/

வேன் - லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கரூரில் ஆடுகளை ஏற்றி வந்த வேன் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 2 இளைஞா்கள் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:29 pm

DIN

கரூரில் ஆடுகளை ஏற்றி வந்த வேன் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 2 இளைஞா்கள் படுகாயமடைந்தனா்.

கரூா் மூலிமங்கலம் மொசக்கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் பாண்டியன்(40). இறைச்சிக்கடைக்காரா். இவா் தனது மகன் தமிழரசன் (22), உறவினா் மகன் சந்தோஷ் குமாா்(29) ஆகியோருடன் வெள்ளியணையில் ஆடுகளை சனிக்கிழமை வேனில் ஏற்றிக்கொண்டு மொசக்கவுண்டனூா் நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

கரூா் - திருச்சி சாலையில் தோரணக்கல்பட்டி என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த லாரி திடீரென வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

படுகாயமடைந்த பாண்டியன் மற்றும் சந்தோஷ் குமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகராஜ்(29) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.