கரூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,792 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3,374 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 43 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் 375 போ் உள்ளனா்.