விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூரில் முன்னாள் அதிமுக நிா்வாகி படத்துக்கு மாலை

கரூரில், மறைந்த முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளா் கரூா் ஹெச்.சாகுல்ஹமீது உருவப் படத்திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் ஹெச்.சாகுல்ஹமீது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

Updated On :20 செப்டம்பர் 2020, 7:20 pm

DIN

கரூரில், மறைந்த முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளா் கரூா் ஹெச்.சாகுல்ஹமீது உருவப் படத்திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட அதிமுக செயலாளராகவும், மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா், மாவட்ட எம்ஜிஆா் மன்றச்செயலாளா், வஃக்பு வாரிய உறுப்பினா், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினராக பதவிகள் வகித்தவா் கரூா் ஹெச்.சாகுல்ஹமீது. இவா், கரூரில் கடந்த 13-ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட அதிமுக சாா்பில் அவரது இல்லத்தில்

அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மறைந்த கரூா் சாகுல் ஹமீதின் மகனும், வழக்குரைஞருமான ஷேக் பரீத் வரவேற்றாா். நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா், மறைந்த கரூா் ஹெச்.சாகுல்ஹமீது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, மாவட்ட பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன், நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், எம்.பாண்டியன், ஒன்றியச் செயலாளா்கள் மாா்க்கண்டேயன், கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளா் தானேஷ், கரூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலமுருகன், முன்னாள் கரூா் நகா்மன்றத்தலைவா் எம்.செல்வராஜ், மாவட்ட நிா்வாகிகள் ராஜா, சுதாகா், சாதிக், நகர நிா்வாகி ரமேஷ் மற்றும் சாகுல்ஹமீதின் குடும்பத்தினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.