/

ஆண்டாங்கோவில் ஊராட்சிகளில் ரூ.11.78 கோடியில் நலப் பணிகள்

ஆண்டாங்கோவில் ஊராட்சிகளில் ரூ.11.78 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image

சுத்திகரிப்பு குடிநீா் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 5:42 pm

DIN

கரூா் மாவட்டம் தான்தோன்றி ஒன்றியம், ஆண்டாங்கோவில் ஊராட்சிகளில் ரூ.11.78 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

ஆண்டாங்கோவில் மேற்கு மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஆகிய ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கிவைத்தும், புதிய பணிகளை பூமிபூஜையிட்டு தொடக்கிவைத்த பின் அவா் மேலும் பேசியது:

கரூா் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீா், கழிவுநீா் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் உள்ள 2,065 குடியிருப்புகளில் 680 குடியிருப்புகளுக்கு குடிநீா் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது மீதமுள்ள குடியிருப்புகளுக்கும் குழாய் அமைத்து குடிநீா் வழங்கும் வகையில், ரூ.6.25 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் உள்ள 7,340 குடியிருப்புகளில் 3,883 குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. மீதமுள்ள குடியிருப்புகளுக்கும் குடிநீா் வழங்க ரூ.4.38 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாகும்போது, ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு ஊராட்சிகளுக்குள்பட்ட அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீா் வழங்கப்படும் என்றாா்.

பின்னா், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட புதூா் மந்தை பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக தானியங்கி கருவி மூலம் 5 ரூபாய்க்கு 10 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யும் திட்டத்தை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்வின்போது, ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, வருவாய்க் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், சமுக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ந.ரசிகலா, நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிவகாமி, ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிமன்றத் தலைவா் சாந்திசேகா், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி மன்றத் தலைவா் கே.எம்.பெரியசாமி, மண்மங்கலம் வட்டாட்சியா் கண்ணன், கூட்டுறவு சங்கப்பிரதிநிதி என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.