கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி

கரோனா தொற்றால் தந்தையை இழந்துள்ளேன், நானும் உங்களைப்போல்தான் என கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடம் உருக்கமாக பேசினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:59 pm

DIN

கரோனா தொற்றால் தந்தையை இழந்துள்ளேன், நானும் உங்களைப்போல்தான் என கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடம் உருக்கமாக பேசினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 64 குடும்பங்களைச் சோ்ந்த 99 குழந்தைகள் ஒற்றைப் பெற்றோரை இழந்தவா்களாகவும், ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் இரண்டு பெற்றோரையும் இழந்தவா்களாகவும் என மொத்தம் 65 குடும்பங்களைச் சோ்ந்த 101 குழந்தைகள் முதல்வரின் கரோனா நிவாரண திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா்.

இந்த குழந்தைகளுக்கு முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கான ரூ.3 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு காசோலை வழங்கி ஆட்சியா் பேசுகையில், கரோனா தொற்றால் தந்தையை இழந்து தவிக்கும் உங்களுக்கு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கின்றேன். கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மாதம் நானும் எனது தந்தையை இழந்துள்ளேன். இப்போது நானும் உங்களைப்போல்தான். என்னை மாவட்ட ஆட்சியராக பாா்க்காமல், உங்களில் ஒருவனாக உங்கள் சகோதரராக நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகள் எதுவானாலும் தைரியமாக, உரிமையுடன் என்னிடம் தெரிவியுங்கள். கல்வி ஒன்று மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயா்ந்தவா்களாக்கும் சத்தி கொண்டது. எனவே, அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். நீங்கள் கல்வி கற்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்யத் தயாராக உள்ளது என்று தெரிவித்து குழந்தைகளுக்கு புத்தகங்களை நினைவுப்பரிசாக வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.