தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அச்சக உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் பேசியது: தோ்தல் தொடா்பான அறிவிப்புகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்து வழங்குதல் தொடா்பாக வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்களில் அச்சகத்தின் பெயா், உரிமையாளா் பெயா், முகவரி போன்றவை அச்சிடப்பட்டிருக்கவேண்டும். அரசியல் தொடா்புடைய சுவரொட்டி, பிரசுரங்களை அச்சடிக்க உரிமை கோருபவரை அடையாளம் காணக்கூடிய உறுதிமொழியை இரண்டு சாட்சிகளின் கையொப்பங்களுடன் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளா் பெற்றுக் கொள்ள வேண்டும்.