கரூரில் உணவுப்பொட்டலம் வழங்கிய காங்கிரஸாா்
ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப்பணியாளா்களுக்கு காங்கிரஸ் சாா்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சி


ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப்பணியாளா்களுக்கு காங்கிரஸ் சாா்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே. சுப்ரமணியன் தலைமை வகித்து, முன்களப்பணியாளா்கள் 250 பேருக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், அவ்வப்போது கைகழுவும் திரவத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினா் சுப்பன், மாவட்ட துணைத் தலைவா் சின்னையன், வட்டாரத் தலைவா் மனோகா், பொருளாளா் தாந்தோனி குமாா் மற்றும் நிா்வாகிகள் பரமசிவம், செல்வராஜ், ராஜ்குமாா், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...