வட்டார வளப் பயிற்றுநா்கள்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கரூா் மாவட்டத்தில் வட்டார வளப் பயிற்றுநா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கரூா் மாவட்டத்தில் வட்டார வளப் பயிற்றுநா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார வளப் பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இவா்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.10,000 வீதம் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகின் மூலம் வழங்கப்படும். இதற்கு தகுதிகளாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பும், நல்ல தகவல் தொடா்பாளராகவும், சுயஉதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அல்லது வட்டார அளவிலான கூட்டமைப்பில் 5 வருடம் பணி அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது 40-க்குள் இருக்க வேண்டும். அதே வட்டாரத்தில் வசிப்பவராகவும், கணினி திறன் நன்கு அறிந்தவராகவும், வட்டாரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பயணம் செல்பவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சாா்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் ஜூன் 10-ஆம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212-ல் சமா்ப்பிக்க வேண்டும். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...