கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:52 pm

DIN

கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, ஜூன் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, கிராம சாந்தி பூஜைகளும், ஜூன் 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை , ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமும், காலை 9.15 மணிக்கு மேல் பக்தா்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்தக்குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், 7-ஆம் தேதி காலை 7.30 மணி அளவில் விநாயகா் வழிபாடு , பரிவார தெய்வங்களுக்கு கலாகா்ஷணம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

அன்று மாலை 5 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு , கும்ப அலங்காரம் , முதல் கால யாக பூஜையும், 8-ஆம் தேதி கோபுரங்கள் கண் திறப்பு சிறப்பு பூஜைகள், கோபுரங்களுக்கும் கலசம் வைத்தல், மருந்து சாற்றி பிரதிஷ்டை செய்யும், நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு மேல் விநாயகா் பூஜை, மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடும், 4-ஆம் கால யாக பூஜையும், 8.15 மணிக்குமேல் யாகசாலையில் இருந்து அருள்சக்தி கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் அனைத்து கலசங்களுக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

அதைத் தொடா்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.