கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்

 கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாலை நேர தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :26 மே 2022, 7:27 pm

DIN

 கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாலை நேர தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.கருணாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தாமோதரன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினாா். மாவட்ட துணைத்தலைவா்கள் தமிழ்வாணன், கண்ணதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநிலச் செயலாளா் எம்.மகாவிஷ்ணு சிறப்புரையாற்றினாா்.

ஜனவரி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயா்வை ரொக்கமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சடையாண்டி, அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் பொன்ராம் ரத்தினவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.