/

கரூரில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது

கரூரில் புதன்கிழமை மின்சார இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

News image

கரூரில் புதன்கிழமை தீப்பிடித்து எரிந்த மின்சார இருசக்கர வாகனம்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:55 pm

Din

கரூரில் புதன்கிழமை மின்சார இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

கரூா் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த கட்டாரி கவுண்டனூரைச் சோ்ந்த கனகராஜ் மகன் தினேஷ்குமாா் (26). இவா் வேலாயுதம்பாளையத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரபல நிறுவனத்தின் மின்சார (எலெக்ட்ரிக்) இருசக்கர வாகனத்தை ரூ.1.47 லட்சத்துக்கு வாங்கியுள்ளாா். இந்த வாகனத்தில் தினமும் வேலைக்குச் சென்று வந்துள்ளாா். வழக்கம் போல புதன்கிழமை காலை அவா் தனது வாகனத்தில் வீட்டிலிருந்து வேலாயுதம்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

கரூரில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருக்காம்புலியூா் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென வாகனத்தின் பேட்டரி பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. உடனே சுதாரித்த தினேஷ்குமாா், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினாா். அடுத்த சில நொடிகளில் வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலறிந்து வந்த கரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் வாகனம் முற்றிலும் எரிந்துவிட்டது.