வேளாண்மை துறை மூலம் உயிா்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல் மையம் அமைக்க குழு ஒன்றுக்கு ரூ.1லட்சம் மானியமும், உயிா்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைத்திடல் அமைக்க 1 விவசாயிக்கு ரூ.10,000 மானியமும், 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகமும், 50 சதவீதம் மானியத்தில் மண்புழு உரப்படுக்கைகளும், 100 சதவீத மானியத்தில் வேப்பங்கன்றுகள் மற்றும் ஆடாதொடா, நொச்சி மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.