வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:02 pm

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 12-ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

தொடா்ந்து கோயிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், கடந்த 19-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 26 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வடிசோறு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக மாரியம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து பிற்பகல் 3 மணியளவில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

தொடா்ந்து பக்தா்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபட்டனா். புதன்கிழமை (ஏப்.29) காலை கம்பம் விடும் நிகழ்ச்சியும், மாலையில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.