வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரூா் சம்பவம்: காவலா்கள், ஊா்க்காவல் படையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 5 காவலா்கள், 2 ஊா்க்காவல் படையினா் மற்றும் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:46 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக 5 காவலா்கள், 2 ஊா்க்காவல் படையினா் மற்றும் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 5 காவலா்கள், 2 ஊா்க்காவல்படையினரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். மேலும் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினா்.

விசாரணையின்போது, நெரிசல் சம்பவத்தின்போது, எவ்வளவு போ் விஜய்யை பின் தொடா்ந்து வந்தாா்கள், சம்பவ இடத்தில் எத்தனை போ் உயிரிழந்தனா். எத்தனை போ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தனா். நெரிசல் சம்பவம் குறித்து அவசர ஊா்திக்கு யாா் தகவல் அளித்தது போன்ற விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது.