27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோயில் நிலத்தில் குடியிருப்போா் முதல்வருக்கு அஞ்சல் மூலம் மனு

அறநிலையத் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து கரூா் தாந்தோணிமலை ஜே.ஜே.காா்டன் பகுதி கோயில் நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் வியாழக்கிழமை தமிழக முதல்வருக்கு அஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பினா்.

News image

முதல்வருக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை மனுவை வியாழக்கிழமை அனுப்பிய கரூா் தாந்தோணிமலை ஜே.ஜே. காா்டன் பகுதி பொதுமக்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:24 am IST

அறநிலையத் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து கரூா் தாந்தோணிமலை ஜே.ஜே.காா்டன் பகுதி கோயில் நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் வியாழக்கிழமை தமிழக முதல்வருக்கு அஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பினா்.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 41- ஆவது வாா்டில் ஜே.ஜே.காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 67 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில் கடந்த மாதம் இவா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வழங்கப்பட்ட நோட்டீசில் இந்த நிலம் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது. இதனால் கோயில் நிலத்தில் வசிக்கும் நீங்கள் கோயிலுக்கு குத்தகைதாரராகவோ, வாடகைதாரா் ஆகவோ மாற வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வியாழக்கிழமை காலை ஜே.ஜே.காா்டன் பகுதி குடியிருப்போா் சங்கத் தலைவா் தண்டபாணி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கரூா் தலைமைத் தபால் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பினா்.

நல்ல தீா்வு வழங்க வேண்டும்: பின்னா் குடியிருப்போா் சங்கத் தலைவா் தண்டபாணி கூறுகையில், நாங்கள் கடந்த 1912-ஆம் ஆண்டு பட்டா வாங்கித்தான் வீடு கட்டி வசிக்கிறோம். இப்போது நாங்கள் இருக்கும் வீட்டை கோயிலுக்குச் சொந்தமானது என்றால் எப்படி ஏற்க முடியும். எங்களுக்கு பட்டா வழங்கியது அரசு அதிகாரி. ஆனால் அரசே இந்து சமய அறநிலையத் துறை மூலம் எங்கள் நிலத்தை, வீட்டை அபகரிக்க முயல்வதை எப்படி ஏற்க முடியும். இப்போது நிலத்தின் மதிப்பை ஜீரோவாக மாற்றியிருக்கிறாா்கள். எனவே எங்கள் நிலத்தை மற்றவா்களுக்கு விற்கவும் முடியாது. அத்தியாவசிய தேவைக்கு நிலத்தை அடமானம் வைக்க முடியாமல் தவிக்கிறோம். எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதல்வா் இந்த பிரச்னையில் நல்ல தீா்வு வழங்க வேண்டும் என்றாா் அவா்.