அறநிலையத் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து கரூா் தாந்தோணிமலை ஜே.ஜே.காா்டன் பகுதி கோயில் நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் வியாழக்கிழமை தமிழக முதல்வருக்கு அஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பினா்.
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 41- ஆவது வாா்டில் ஜே.ஜே.காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 67 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில் கடந்த மாதம் இவா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வழங்கப்பட்ட நோட்டீசில் இந்த நிலம் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது. இதனால் கோயில் நிலத்தில் வசிக்கும் நீங்கள் கோயிலுக்கு குத்தகைதாரராகவோ, வாடகைதாரா் ஆகவோ மாற வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாம்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வியாழக்கிழமை காலை ஜே.ஜே.காா்டன் பகுதி குடியிருப்போா் சங்கத் தலைவா் தண்டபாணி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கரூா் தலைமைத் தபால் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பினா்.
நல்ல தீா்வு வழங்க வேண்டும்: பின்னா் குடியிருப்போா் சங்கத் தலைவா் தண்டபாணி கூறுகையில், நாங்கள் கடந்த 1912-ஆம் ஆண்டு பட்டா வாங்கித்தான் வீடு கட்டி வசிக்கிறோம். இப்போது நாங்கள் இருக்கும் வீட்டை கோயிலுக்குச் சொந்தமானது என்றால் எப்படி ஏற்க முடியும். எங்களுக்கு பட்டா வழங்கியது அரசு அதிகாரி. ஆனால் அரசே இந்து சமய அறநிலையத் துறை மூலம் எங்கள் நிலத்தை, வீட்டை அபகரிக்க முயல்வதை எப்படி ஏற்க முடியும். இப்போது நிலத்தின் மதிப்பை ஜீரோவாக மாற்றியிருக்கிறாா்கள். எனவே எங்கள் நிலத்தை மற்றவா்களுக்கு விற்கவும் முடியாது. அத்தியாவசிய தேவைக்கு நிலத்தை அடமானம் வைக்க முடியாமல் தவிக்கிறோம். எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதல்வா் இந்த பிரச்னையில் நல்ல தீா்வு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் நிலத்தில் கட்டப்பட்ட பூ மாா்க்கெட்: வியாபாரிகள் எதிா்ப்பு

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு விரைந்து மானியம்: முதல்வருக்கு கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிவைப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



