‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கோடை சாகுபடிக்கு உரங்கள் போதிய அளவில் கையிருப்பு: கரூா் ஆட்சியா் தகவல்!

கோடை கால பயிா்கள் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

News image

கரூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

Updated On :23 மே 2026, 12:40 am IST

கோடை கால பயிா்கள் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினா். தொடா்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியா் பேசுகையில், தமிழக அரசு மூலம் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 846 மெட்ரிக் டன்னும், டிஏபி 333 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 423 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1,244 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 2,846 மெ.டன் ரசாயன உரங்கள் கையிருப்பில் உள்ளன.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் நெற்பயிா் சாகுபடிக்காக நெல் ரகங்கள் 13 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் கம்பு, சோளம் ஆகியவை 35.950 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிா்களான உளுந்து, கொள்ளு, தட்டைப்பயறு ஆகியவை 10.063 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை, எள் ஆகியவை 1.992 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.

கரூா் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நிகழாண்டில் மே மாதம் வரை 96.80 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 29.20 மி.மீ குறைவாக மழை பெய்துள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், கரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்திய பால கங்காதரன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் (பொ) சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாவித்திரி, இணை இயக்குநா் (வேளாண்மை)ச.சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அபிராமி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.