இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெரம்பலூரில் தமிழியக்க முப்பெரும் விழா

பெரம்பலூர் தமிழியக்கம் சார்பில் கவியரங்கம், கவிதை நூல் வெளியீடு, விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள அன்னை பருதமா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 12:59 am

DIN

பெரம்பலூர் தமிழியக்கம் சார்பில் கவியரங்கம், கவிதை நூல் வெளியீடு, விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள அன்னை பருதமா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் செ. கணேசன் தலைமை வகித்தார். திருச்சி தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க. சிவசாமி, தமிழியக்கச் செயலர் பெ. பாரதி ஆறுமுகம், பொருளாளர் பெ. கசேந்திரன், புரவலர் பெ. நாகராஜன் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி கவிதை நூலை வெளியிட்டார். வேலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இரா. சிவராமன் விருது வழங்கி பாராட்டினார். 
தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில், கவியரங்கத் தலைவர்கள் பேராசிரியர் ப. செல்வகுமார், மணிமாறன், கோவிந்தராஜன் பாலு, இராம. வேல்முருகன் ஆகியோர் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்,  அப்துல் ரகுமான் ஆகியோரது சிறப்புகள் குறித்து பேசினர். 
தமிழியக்கத் தலைவர் கவிஞர் முத்தரசன் வரவேற்றார். கவிஞர் ராமர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.