மாவட்ட அளவிலான  பேச்சுப் போட்டி

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் இளம் படைப்பாளர் விருதுக்கான பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் இளம் படைப்பாளர் விருதுக்கான பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக. 27 ஆம் தேதி வட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்பட்டது. போட்டியை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் கவிஞர் அகவி முன்னிலையில், மாவட்ட மைய நூலக அலுவலர் சி. அசோகன் தொடக்கி வைத்தார். 
போட்டி நடுவர்களாக  ஆசிரியர்கள் த. மாயக்கிருஷ்ணன், ஆ. முருகேசன், ந. சங்கீதா ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நூலக வார விழாவில் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.