இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பூச்சித்தாக்குதல் : மக்காச்சோளத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

பூச்சித் தாக்குதலுக்குள்ளான மக்கச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி அய்யலூர்குடிகாடு மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Updated On :20 நவம்பர் 2018, 8:33 am IST

பூச்சித் தாக்குதலுக்குள்ளான மக்கச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி அய்யலூர்குடிகாடு மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
 பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
அய்யலூர்குடிகாடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். இப்பயிரில் பூச்சி தாக்குதலால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. 
எங்களுக்கு பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு நிறுவனத்தின் கள அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர்கள் குழுவை எங்கள் கிராமத்துக்கு அனுப்பி மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தமிழக அரசின் அங்கீகாரம் இல்லாத தனியார் செவிலியர் உதவியாளர் பயிற்சி பள்ளியில் படித்தவர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம சுகாதார செவிலியர் பணி வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். 
தமிழ்நாடு செவிலியர் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலர் சுரேஷ் ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.