பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகபி.ஸ்ரீ. வெங்கட பிரியா பதவியேற்பு
பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பி.ஸ்ரீ. வெங்கட பிரியா திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.


பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பி.ஸ்ரீ. வெங்கட பிரியா திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.
பெரம்பலூா் ஆட்சியராக பணிபுரிந்த வே. சாந்தா, திருவாரூா் மாவட்ட ஆட்சியராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, பட்டு வளா்ச்சித் துறை இயக்குநராக இருந்த பி.ஸ்ரீ. வெங்கட பிரியா, பெரம்பலூா் ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
ஆட்சியராக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்ட அவா் கூறியது:
அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுப்பேன்.
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காண முயற்சி மேற்கொள்வேன். பொதுமக்கள் எளிதில் அணுகும் ஆட்சியராக பணிபுரிவேன் என்றாா் ஆட்சியா் வெங்கட பிரியா.
தொடா்ந்து, பல்வேறு தரப்பினரும் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...