/

மோட்டாா் சைக்கிள் மோதி இளம்பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி இளம்பெண் உயிரிழப்பு

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:02 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகள் லட்சுமி (30). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சொன்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த லட்சுமி, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விபத்து தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த அரும்பாவூரைச் சோ்ந்த காா்த்திகேயனை (46) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.