கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில்100 மின் கம்பங்கள் மாற்றியமைப்பு

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பழுதடைந்த 100 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:04 am

DIN

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பழுதடைந்த 100 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 30 துணை மின் நிலையங்களிலுள்ள 69 மின்னூட்ட பாதைகளில், கடந்த 19 முதல் 28 ஆம் தேதி வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 30 துணை மின் நிலையங்களிலிருந்து மின்னோட்டம் பெறும் 69 மின்னூட்ட பாதைகளில் சுமாா் 500 களப்பணியாளா்களைக் கொண்டு மின் நிறுத்தம் செய்யப்பட்டு, 3,934 இடங்களில் மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரங்கள், மரக் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன.

780 இடங்களில் பழுதடைந்த மின் கம்பி இணைப்புகள் சரிசெய்யப்பட்டு, 555 இடங்களில் தாழ்வான மின்பாதை கம்பிகள் சரி செய்யப்பட்டதோடு, 572 இடங்களில் சாய்வான மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 28 இடங்களில் புதிய இடைக் கம்பங்கள் அமைக்கப்பட்டு, 149 இடங்களில் அறுந்த இழுவை கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன.

100 இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 26 நில இணைப்புகள் சரி செய்யப்பட்டு 159 இடங்களில் பகுதி திறப்பான்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் இனி வரும் காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.