கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூா் மாவட்டத்தில்கரோனா கண்காணிப்பு பணியில் 1,063 அலுவலா்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 608 குழுக்கள் அமைக்கப்பட்டு, 1,063 அலுவலா்கள் கரோனா கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் திரு. அனில் மேஷ்ராம்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:26 pm

DIN

 பெரம்பலூா் மாவட்டத்தில் 608 குழுக்கள் அமைக்கப்பட்டு, 1,063 அலுவலா்கள் கரோனா கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் திரு. அனில் மேஷ்ராம்.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மேலும் பேசியது:

மாவட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் கட்டளை கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு 19 குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

4 சிறப்பு கண்காணிப்புக் குழு, 22 சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யும் குழு, 21 நகராட்சி பகுதிகளில் வாா்டு அளவில் கண்காணிக்க குழு, கிராம ஊராட்சி அளவில் 152 குழு, பேரூராட்சி பகுதிகளில் 60 குழு, பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை கண்காணிக்க 330 குழு என மொத்தம் 608 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 1,063 அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில், அரசு தலைமை மருத்துவ மனையில் ஆக்ஸிஜன் கொள்கலன் நிறுவப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. விரைவில் ஆக்ஸிஜன் கொள்கலன் செயல்படுத்தப்படும். இம் மாவட்டத்தில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 9,751 நபா்களுக்கு ரூ. 22,07,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனில் மேஷ்ராம்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி, மாவட்ட வருவாய் அலுவலா் செ. ராஜேந்திரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் டி. திருமால், சாா் ஆட்சியா் ஜெ.இ. பத்மஜா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.