கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூட்டுறவு வங்கிகளில் தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை தேவை

கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்து, தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும்

News image
Updated On :16 ஜூன் 2021, 8:42 pm

DIN

கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்து, தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டுமென்று, பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சங்கத்தின் தலைவா் மு. ஞானமூா்த்தி அனுப்பியுள்ள மனு:

அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகளை செய்து பொறுப்புக்கு வந்த பலா், கூட்டுறவு வங்கிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பல முறைகேடுகளை செய்து வருகின்றனா். பினாமி பெயரில் பலருக்கு கடன் வழங்கியுள்ளனா். தகுதியான பயனாளிகள் பலா் கடன் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.

நகைக்கடன் கேட்ட மக்களிடம் நகைகளை பெற்றுக்கொண்டு, அதை கூட்டுறவு வங்கியில் வைக்காமல் வேறு வங்கியில் வைத்து பணம் பெற்றுள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்ததும், கடன் பெற்ற மக்கள் கூட்டுறவு வங்கிக்குச் சென்று நகைகளைத் திரும்பக்கேட்டால் இழுத்தடித்து வருகின்றனா்.

கூட்டுறவு சங்கத் தலைவா்கள் செய்த முறைகேடுகளால் உண்மையான விவசாயிகள் விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்பெற முடியாத நிலையில் உள்ளனா்.

எனவே அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.