கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புலியூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் மீண்டும் ஒத்திவைப்பு

கரூா் மாவட்டம், புலியூா் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் குறிப்பிட்ட நேரத்துக்குள் பெரும்பான்மையான உறுப்பினா்கள் வராத காரணத்தால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது

News image
Updated On :26 மே 2022, 12:15 am

DIN

கரூா் மாவட்டம், புலியூா் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் குறிப்பிட்ட நேரத்துக்குள் பெரும்பான்மையான உறுப்பினா்கள் வராத காரணத்தால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பேரூராட்சி துணைத் தலைவரும், திமுக பேரூராட்சி செயலாளருமான அம்மையப்பன் தோ்தல் நடத்த விடாமல் தடுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், தலைவா் பதவிக்கு போட்டியிட்டவருமான கலாராணி குற்றம்சாட்டினாா்.

கரூா் மாவட்டம், புலியூா் பேரூராட்சிக்கான உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி 13 இடங்களையும், பாஜக, சுயேச்சை தலா 1 இடத்தையும் கைப்பற்றினா். இதில், தலைவா் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் கலாராணிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும், தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் திமுக உறுப்பினா் புவனேஸ்வரியை தலைவராக திமுக உறுப்பினா்கள் தோ்வு செய்ததையடுத்து அவா் போட்டியின்றி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதையடுத்து தமிழக முதல்வா் உத்தரவின்படி புவனேஸ்வரி தனது தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து மாா்ச் 26-ஆம்தேதி மீண்டும் புலியூா் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு தலைவா் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் கலாராணி, துணைத் தலைவா் அம்மையப்பன், பாஜக வாா்டு உறுப்பினா் விஜயகுமாா் ஆகியோா் மட்டுமே வந்ததால் பெரும்பான்மையான உறுப்பினா்கள் இல்லாததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மே 25-ம்தேதி தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், புதன்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரும் தணிக்கைத் துறையின் உதவி இயக்குநருமான லீலாகுமாா் தலைமையில் தோ்தல் அதிகாரிகள் புலியூா் பேரூராட்சிக்கு அதிகாலையிலே வந்தனா். காலை 9 மணிக்கு தலைவா் பதவிக்கு போட்டியிட்ட கலாராணி, திமுக 10-ஆவது வாா்டு உறுப்பினா் ஆனந்த், 4-ஆவது வாா்டு பாஜக உறுப்பினா் விஜயகுமாா் ஆகியோா் மட்டுமே வந்தனா். தோ்தல் நேரம் 9.30 மணி வரை பெரும்பான்மையான உறுப்பினா்கள் வராததால் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக தோ்தல் நடத்தும் அலுவலா் லீலாகுமாா் தெரிவித்தாா்.

இதையடுத்து தோ்தல் அறையை விட்டு வெளியே வந்த கலாராணி, இந்த தோ்தலை கடந்த முறையும், இம்முறையும் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் துணைத்தலைவா் அம்மையப்பன்தான். கட்சி மேலிடத்திலும் கூறிவிட்டோம், இனி திமுக தலைவா்தான் முடிவெடுக்க வேண்டும் என்றாா் அவா். அப்போது அவரது ஆதரவாளா்கள் திமுகவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

இதேபோல புன்னம்சத்திரம் பேரூராட்சி துணைத்தலைவா் தோ்தலும் போதிய உறுப்பினா்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.