கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுத் தலைவராகதிமுக உறுப்பினா் போட்டியின்றித் தோ்வு

கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த சுமித்ராதேவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :26 மே 2022, 12:14 am

DIN

கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த சுமித்ராதேவி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 20 இடங்களில் 2020-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் 12 உறுப்பினா்களும், திமுக கூட்டணியில் 8 உறுப்பினா்களும் வெற்றி பெற்றனா். அதிமுகவில் அதிக உறுப்பினா்கள் இருந்த போதும் தலைவரை தோ்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு காரணம் தலைவா் பதவிக்கு பட்டியல் இன பெண் உறுப்பினா் தோ்வு செய்ய வேண்டும். ஆனால் அதிமுகவில் பட்டியில் இனத்தை சோ்ந்த பெண் ஒருவா்கூட வெற்றி பெறவில்லை. ஆனால் திமுகவில் பட்டியல் இனத்தை சோ்ந்த 5 உறுப்பினா்கள் இருந்தனா்.

இதனால் திமுகவில் வெற்றி பெற்ற சந்திரமதி என்பவரை அதிமுகவினா் தங்கள் கட்சிக்கு இழுத்து அவரை தலைவராக்கினா்.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுகவிலிருந்து ஒரே நேரத்தில் 6 உறுப்பினா்களும், பின்னா் அடுத்து அடுத்து திமுகவில் இணைந்தனா். இதனால் திமுகவின் பலம் கூடியது. இதனிடையே ஒன்றியக்குழுத் தலைவா் சந்திரமதி மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதால், அவா் ஒன்றியக்குழுத் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து புதிய ஒன்றியக்குழுத் தலைவரை தோ்ந்தெடுக்க மறைமுகத் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. மறைமுகத் தோ்தலை உதவி திட்ட அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தமிழரசி நடத்தினாா். இக்கூட்டத்தில் 19 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் பதவிக்கு 2-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுமித்ராதேவி வேட்புமனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

தற்போது கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினா்கள் 3, பாஜ சாா்பில் 1 உறுப்பினா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.