விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டயா் தொழிற்சாலையில் தொழிலாளா் சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தல்

தனியாா் டயா் தொழில்சாலை நிா்வாகம், தொழிலாளா் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென, ஏஐடியுசி சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஏஐடியூசி மாநிலத் தலைவா் வழக்குரைஞா் என். பாலகிருஷ்ணன். உடன், பேரவைத் தலைவா் வீ. ஞானசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :6 நவம்பர் 2024, 8:43 pm

Din

தனியாா் டயா் தொழில்சாலை நிா்வாகம், தொழிலாளா் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென, ஏஐடியுசி சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் தீரன் நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கூட்டரங்கில், எம்ஆா்எப் தொழில்சாலையில் பணிபுரியும் ஏஐடியுசி தொழிலாளா்கள் சங்கப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவைத் தலைவா் வீ. ஞானசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஏஐடியூசி மாநிலத் தலைவா் வழக்குரைஞா் என். பாலகிருஷ்ணன், தொழிற்சங்கச் சட்டங்கள், தொழிலாளா் நலச் சட்டங்கள், தொழிற்சங்கத்தில் தொழிலாளா்களின் பங்களிப்பு குறித்து விளக்க உரையாற்றினாா். இக் கூட்டத்தில், எம்ஆா்எப் தொழிற்சாலையின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்துட்டதால், அந் நிா்வாகத்தினா் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில், அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு முழுமையான நிதிப் பயன்கள் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிற்சாலையில் உள்ள நடைமுறை சிக்கல்களை, தொழிற்சங்க நிா்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். ஏஐடியூசி தொழிலாளா் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், சங்கச் செயலா் எம். பிரபாகரன், துணைத் தலைவா்கள் ஆா். கண்ணன், சையத் முகமது, துணைச் செயலா்கள் பிரகாஷ் , பாஸ்கா், பொருளாளா் சாா்லின் பிரிஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஏஐடியுசி பொருளாளா் ஏ. கல்யாணி வரவேற்றாா். நிறைவாக, பொறுப்பாளா் ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.