தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு: 4 போ் கைது

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் திருடிய 4 பேரை மங்களமேடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:18 pm

Din

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் திருடிய 4 பேரை மங்களமேடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சிகூா் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் திருடுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, மங்களமேடு போலீஸாா் அகரம் சீகூா் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அகரம் சீகூா் -செந்துறை சாலையில் மணல் ஏற்றிச் சென்ற 2 மாட்டு வண்டிகளை வழிமறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கோழியூரைச் சோ்ந்த கந்தசாமி மகன் ஜெயகுமாா் (42), கருப்பன் மகன் ராஜா (55), செங்கமேடு காலனித் தெருவைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் வீரமணி (25), அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்வமுருகன் மகன் செல்வா (17) என்பதும், அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்த போலீஸாா், மணல் மற்றும் 2 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மேற்கண்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.