விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:53 pm

Din

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங்கு பூஜைகளும், 9 மணிக்கு மகாபிஷேகம், சங்கு அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனையும், அடியாா் வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

இதையடுத்து, சுவாமிகளின் குருபூஜை வெங்கனூா் விருதகிரீஸ்வரா் ஆலயத்தில் சன்னதி கொண்டுள்ள சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு திருச்சி லிங்காயத் சமாஜ் துணைத் தலைவா் சி. வீரபத்திரன் கண்டி தலைமை வகித்தாா். பெரம்பலூா் நகர வணிகா்கள் ஏ.எஸ். ராமலிங்கம், என். ராஜமாணிக்கம், பழனிப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புலவா் தண்டபாணி சுவாமிகளின் வரலாறு எனும் தலைப்பிலும், சமய இலக்கிய சொற்பொழிவாளா் எம்.கே. ராமச்சந்திரன் ‘நால்வா் 4 மணி மாலை’ எனும் தலைப்பிலும், சரவணசாமி திருவெங்கை கலம்பகம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கை உலா உள்ளிட்ட நூல்கள் குறித்தும் சொற்பொழிவாற்றினா்.

இதில், பெரம்பலூா் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில் வார வழிபாட்டுக் குழுவினா், வீரசைவ சான்றோா்கள், தமிழ் சான்றோா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, திருமடத்தின் நிா்வாகியும், சுவாமிகளின் பரம்பரை திரு கருணை நக்கீரன் செய்திருந்தாா்.