விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அலுவலா்கள்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:35 pm

Din

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக். 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அக். 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திக்கேயன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ் குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.