இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாளை வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியான வாக்காளா் கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்து, கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2026-இல் 18 வயது பூா்த்தியடையும் வாக்காளா்கள் மற்றும் இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாதவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

எனவே, இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயற்சி காரணமாக நீக்கம் செய்தல், வாக்காளா் விவரங்களான பெயா், உறவினா் பெயா், உறவு முறை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றை திருத்தம் செய்வதற்காக, தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலா்களிடம் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலத்தில் மனு அளிக்கலாம்.

அதன்படி, பொம்பலூா் சட்டப்பேரவைத்தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளிலும் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வது உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வாக்காளா்கள் இச் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலா்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, உரிய படிவத்தில் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது, இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளம், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.